Monday 27 October 2014

ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோரை பாதுகாக்க சட்டதிருத்த மசோதா மக்களவையில் விரைவில் தாக்கல்

 

    ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் அதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டு விரை வில் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நுகர்வோர் தாங்கள் விரும்பும் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து வாங்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும், ஆன்லைனில் தவறான விளம்பரங்களை கொடுப்பதை தடுக்க வேண்டும் என்றும், இவற்றை சட்டரீதியாக உறுதி செய்ய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்த கொண்டு வரவேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் சமீபகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த கோரிக்கையை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், தற்போதுள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில், ஆன்லைன் ஷாப்பிங் நுகர்வோர்களை பாதுகாக்க வகை செய்யும் புதிய அம்சங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment