Thursday 30 October 2014

நகரமன்ற கூட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது .

திருவாரூர் நகராட்சியின் சாதாரண நகரமன்ற கூட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு. கருணாநிதி மற்றும் டாக்டர் அம்பேத்கர் படங்களை வைக்க வேண்டுமென்று புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், அரசு அலுவல கங்களில் ஜெயலலிதா படத்தை அப்புறப்படுத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

பின்னர் திமுக மற்றும் சுயேட்சை உறுப்பினர் நகராட்சி அலுவலக ஊழியர் சிவசங்கரன் என்பவரிடம் படங்களை ஒப்படைத்தனர்.
இன்னும் ஒரு வாரத்தில் உரிய அனுமதி பெற்று தலைவர்களின் படங்கள் கூட்டரங்கில் வைக்க முயற்சி மேற்கொள்வதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment