Sunday 19 October 2014

முத்துப்பேட்டையில் 84 மி.மீ. மழை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 84 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதியக் காற்றழுத்தத் தாழ்வு மையத்தின் காரணமாக தமிழகத்தில் மழைப் பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விட்டுவிட்டும், சனிக்கிழமை காலையில் இருந்து தொடர்ந்தும் மழை பெய்தது.
இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை லேசாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழைப் பெய்ததால் பலர் வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை. மாலை நேரத்தில் மழை சற்று ஓய்ந்திருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் முத்துப்பேட்டையில் 84 மில்லி மீட்டர் மழை பதிவானது. பிற இடங்களில், நீடாமங்கலம் - 59, குடவாசல் - 49.80, மன்னார்குடி - 37, பாண்டவையாறு தலைப்பு - 35, திருத்துறைப்பூண்டி - 28.60, நன்னிலம் - 25.30, வலங்கைமான் - 24.30, திருவாரூர் - 14.60 என்ற அளவில் மழை பதிவானது.

No comments:

Post a Comment