Thursday 31 March 2016

ரூ. 25 செலுத்தி புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்'


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தில் ரூ. 25 செலுத்தி புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேவை மையம் மூலம் வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும், சேதமடைந்துள்ள அல்லது காணாமல்போன வாக்காளர் அடையாள அட்டைகளுக்குப் பதிலாக ரூ. 25 செலுத்தி 15 நாள்களுக்குள் புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment