Tuesday 22 March 2016

கொடிக்கால்பாளையத்தில் பெயர்ப் பதாகை வைப்பதில் தகராறு

திருவாரூரில் பெயர்ப் பதாகை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் இரு பிரிவுகளாக உள்ளது. இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் சங்கத்தின் பெயர்ப் பதாகை வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் கொடிக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரம்ஜான்அலி, ஜலிலுல்லா, முகமது ஹாஜா, ஆபுதீன், பாட்சா, சுல்தான், முகமது அபுதாகீர், ஷாகுல் அமீது, ஜகபர், முகமது இசாத் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment