Saturday 12 March 2016

திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 251 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு


திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 251 கைத்துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து தேர்தல்  நடத்தை விதி அமலில் இருந்து வருவதால், மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென்று மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாவட்டத்திலுள்ள 27 காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அரசின் உரிமம் பெற்று வைத்திருந்த 251 கைத்துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதி நிறைவடைந்ததும் மீண்டும் துப்பாக்கிகள் உரியவர்களிடம் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment