Tuesday 15 March 2016

திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை


 IST

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
பறக்கும் படைதமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 4–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் வாகன சோதனை, அரசியல் கட்சி கொடி கம்பங்கள், அரசியல் விளம்பர பதாகைகளை அகற்றி வருகின்றனர்.
வாகன சோதனைஇந்த நிலையில் நேற்று திருவாரூர்–மயிலாடுதுறை சாலையில் சொரக்குடி அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி தமிழ்மணி, சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், கருணாகரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக கார், ஆம்னி பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகிறா? என்பது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment