Saturday 19 March 2016

திருவாரூரில் வாகன சோதனை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் கைது
















திருவாரூரில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

7 பேர் கைது

திருவாரூரில் குற்ற செயல்களை தடுத்திடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்தரசு, அப்துல்லா மேற்பார்வையில் 5 துணை சூப்பிரண்டு தலைமையில், 15 இன்ஸ்பெக்டர்கள்¢, 150 போலீசார் கொண்ட தனிப்படையினர் திருவாரூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நகரின் எல்லைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை செய்தனர். இந்த சோதனையில் சந்தேகத்த்துக்குரிய 25 பேரிடம் உரிய கைரேகை பதிவு செய்யப்பட்டன. இதில் 14 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுதிகளில் சோதனை

மேலும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரியவர்களிடம் விசாரணை நடத்தினர். இதேபோல சி.டி. விற்பனை கடைகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி தங்கமகன், வேதாளம், ரஜினிமுருகன், தாரைதப்பட்டை போன்ற புதுப்பட சிடிக்களை விற்பனை செய்வது தெரியவந்ததது.

இதுதொடர்பாக திருவாரூர் காட்டூரை சேர்ந்த பாபு (வயது20), பாலகிருஷ்ணன் (38), திருவாரூர் ஆசாத் தெருவை சேர்ந்த ராஜேஷ் (27), காட்டுக்கார தெருவை சேர்ந்த மதிவாணன் (28), கடைகளில் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் திருவாரூரை சேர்ந்த சவுந்தராஜன் (52) என்பவரை தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 91 புதுப்பட சிடிக்களை பறிமுதல் செய்தனர்.

நன்னிலம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படையினர் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருபிரிவை சேர்ந்த நன்னிலம் சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரி ஆறுமுகம், மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் செல்வகுமார், சுதாகர் ஆகியோர் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் உள்ள சன்னாநல்லூர், கொல்லாபுரம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார், ஆம்னிபஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர்
.

No comments:

Post a Comment