Friday 18 March 2016

tnelections2016: திருவாரூர் விடுதிகளில் காவல் துறையினர் சோதனை


சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் விடுதிகளில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இதையொட்டி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், திருவாரூர் துணைக் காவல் கண்காணிப்பு பகுதிக்குள்பட்ட இடங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர்.முத்தரசு, அப்துல்லா ஆகியோர் தலைமையில் 5 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 150 போலீஸார் திருவாரூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் வியாழக்கிழமை தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், திரையரங்குகள், சிடி விற்பனை கடைகளிலும் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வருகிறவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மாவட்டத்தின் பிற துணைக் காவல் கண்காணிப்புப் பகுதிக்குள்பட்ட இடங்களில் அடுத்தடுத்த நாள்களில் சோதனையில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment