Wednesday 30 March 2016

குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கிய "ஹேர்கிளிப்' நவீன சிகிச்சை மூலம் அகற்றம்



திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வயது குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த "ஹேர்கிளிப்' நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மயிலாடுதுறை கொடங்குடியைச் சேர்ந்த தம்பதி ராஜேஸ்வரி-சந்தானம். இவர்களது ஒரு வயது மகள் சுபஸ்ரீ ஹோர்கிளிப்பை விழுங்கிவிட்டார். அது குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டதால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், சுபஸ்ரீயை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேர்த்தனர்.
இதைத்தொடர்ந்து, அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் சுந்தர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அகநோக்கி கருவி மூலம் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த ஹேர்கிளிப்பை அகற்றினர். தற்போது குழந்தை சுபஸ்ரீ நலமுடன் உள்ளார். இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் பாராட்டினார்.

No comments:

Post a Comment