Wednesday 23 March 2016

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.90 லட்சம் பறிமுதல்

திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.90 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் 12 பறக்கும்படை, 12 நிலை கண்காணிப்புக்குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை திருவாரூர் வட்டாட்சியர் தில்லை நடராஜன் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேன் ஒன்றில் ரூ. 1.15 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், தஞ்சாவூர் - நாகப்பட்டினம் சாலை கிடாரங்கொண்டான் திருவிக கல்லூரி அருகில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாமக்கல்லிருந்து காரைக்காலில் முட்டை விற்பனை செய்து விட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.75 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த பணம் திருவாரூர் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா. முத்துமீனாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு பிறகு மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment