Sunday 29 November 2015

பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயற்சி


திருவாரூர் அருகே சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஜலாலியா தெருவைச் சேர்ந்தவர் சித்திக்அன்வர் மனைவி ரூபினாபேகம் (28). இவர், சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்குள் புதுத்தெருவைச் சேர்ந்த ஜபரூல்லா (42) நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த ரூபினாபேகம் வீட்டுக்குள் இருந்தவாறு காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.
இவரது அலறல் சப்தம் கேட்ட பக்கத்து வீட்டில் இருந்தோர் வருவதற்குள் ஜபரூல்லா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ரூபினாபேகம் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து ஜபரூல்லாவைத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment