Tuesday 12 May 2015

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மே 14 முதல் விண்ணப்பம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி:
தொடக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 14-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் (சிஇஒ) ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசித் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment