Monday 11 May 2015

திருவாரூர் மாவட்டத்தில் 8 லட்சம் பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு கலெக்டர் மதிவாணன் தகவல்

























திருவாரூர் மாவட்டத்தில் 8 லட்சம் பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டிய லுடன் இணைக்கப் பட் டுள்ளதாக கலெக்டர் மதிவாணன் கூறினார்.

சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் விவரங்களை உறுதிப்படுத் துவது மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டி யலுடன் இணைப்பது தொடர் பான சிறப்பு முகாம்கள் நடை பெற்றன. இதில் திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல் நிலைப்பள்ளி, விளமல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் மதிவாணன் நேரில் பார்¢வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

ஆதார் இணைப்பு பணி

வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை உறுதிப் படுத்தும் திட்டம் தேர்தல் ஆணையத்தால் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன் படி திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட் டுள்ள விவரங்களை சரி பார்த்து, உறுதிபடுத்தும் பணி கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக் கள் ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம். ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்காதவர்களை கணக் கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

8 லட்சம் பேர்

வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவை களைவது, இறந்தவர்களின் பெயரை நீக் குவது, நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்களின் விவரங் களை சரியாக குறிப்பது போன்ற பணிகள் சிறப்பு முகாம்களில் நடைபெறு கின்றன.

திருவாரூர் மாவட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 53 ஆயிரத்து 352 ஆகும். இதில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 12 பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு விட்டது. 100 சதவீதம் உறுதியான தகவல்களை கொண்ட வாக்காளர் பட்டியலை உருவாக்க திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் ஒத் துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி னார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மோகன் ராஜ், உதவி கலெக்டர் முத்து மீனாட்சி, தாசில்தார் கண் ணன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி, ஆகியோர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment