Monday 28 September 2015

430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் கலெக்டர் மதிவாணன் தகவல்













கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் 430 ஊராட்சிகளில் நடக்கிறது. கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான 14-வது நிதி ஆணைய மானியத்திலிருந்து பணிகள் தேர்வு செய்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு மற்றும் இதர காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராமப்புறங்களில் உள்ள சீமைக்கருவேலமரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல், ஊராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கோமாரி நோய் தடுப்பு

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்துதல், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டத்தின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவரால் அல்லது ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி பெற்று உறுப்பினர்களால் கொண்டு வரப்படும். எனவே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment