Monday 14 September 2015

திருவாரூர் - தஞ்சை சாலை சீரமைக்கப்படுமா?


பள்ளம், மேடாக மிக மோசமான நிலையில் உள்ள திருவாரூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சுமார் 88 கி.மீ. தொலைவுள்ள தஞ்சாவூர் - திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்து, லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக, காரைக்கால் துறைமுகத்துக்கு சுமை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, திருவாரூர் தியாகராஜர் கோயில்களில் நடைபெறும் விழாக்களின்போது லட்சக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
தற்போது இச்சாலை அதிகளவில் சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது.
திருவாரூர் அருகே நீடாமங்கலம் முதல் கொரடாச்சேரி வரையிலான சுமார் 10
கி.மீ.ó தொலைவு சாலை மிகவும் மோசமான நிலையில் பள்ளம், மேடாக உள்ளது. அதனால், வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அதுவும் இரவு நேரங்களில் இச்சாலையில் பேருந்து ஓட்டுநர்கள்கூட பேருந்தை இயக்க தடுமாறும் நிலை உள்ளது.
சேதமடைந்துள்ள சாலையின் ஒருபுறத்தில் ஆறும், மறுபுறத்தில் வயலும் உள்ளதால் சிறு விபத்து ஏற்பட்டாலும் இழப்புகள் அதிகம் இருக்கும்.
தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான முதற் கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளன.
இப்பணிகள் முடிவடைய குறைந்தது இரண்டு முதல் 3 ஆண்டுகள் ஆகும் என்பதால், சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment