Tuesday 29 September 2015

மலேசியாவில் திருவாரூர் தொழிலாளி சாவு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை



:
மலேசியா நாட்டில் திருவாரூரை சேர்ந்த தொழிலாளி இறந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியாவில் சாவு

திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலம் தாலுகா வெள்ளக்குடி விழல்கோட்டகம் மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 36). இவரது மனைவி ராஜலெட்சுமி. கடந்த சில மாதங்கள் முன்பு தங்கமணி மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தங்கமணி இறந்து விட்டதாக அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து திருவாரூரில் உள்ள அவரது குடும்பத்துக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று தங்கமணி மனைவி ராஜலெட்சுமி, திருவாரூர் கலெக்டர் மதிவாணனை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சொந்த ஊருக்கு...

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா வெள்ளக்குடி விழல்கோட்டகம் மேலத்தெருவில் வசித்து வருகிறேன். எனது கணவர் தங்கமணி . எங்களுக்கு புவனேஸ்வரி, சுபலெட்சுமி, வினோத்ஸ்ரீ ஆகிய 3 மகள்கள் உள்ளனர். எனது கணவர் தங்கமணி, மலேசியா நாட்டில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று தங்கமணி இறந்துவிட்டதாக, அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அவரது உடல் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை. எனக்கு பொருளாதார வசதி இல்லாததால் எனது கணவர் தங்கமணி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

No comments:

Post a Comment