Sunday 20 September 2015

முறையாக ஆவணங்கள் பராமரிக்காததால் 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்கள் செயல்பட தடை



செப்டம்பர் 20,2015, 4:30 AM IST
திருவாரூரில் முறையாக ஆவணங்கள் பராமரிக்காத 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைதனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்கள் செயல்படுவதில் பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் உதவி இயக்குனர் (சென்னை) ஆசாலதா தலைமையில் மருத்துவ குழுவினர் திருவாரூர் நகரில் இயங்கி வரும் 6 தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் திருவாரூர் நகரில் கமலாலயகுளம் மேல்கரை பகுதியிலுள்ள 2 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தெற்குவீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பார்த்ததாகவும், நோயாளிகளின் கையெழுத்து இல்லாமலும் ஆவணங்கள் முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முறையாக ஆவணங்கள் பராமரிக்காத 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது திருவாரூர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன் உடன் இருந்தார்.
சட்டப்படி நடவடிக்கைஇதுகுறித்து திருவாரூர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன் கூறியதாவது:–
திருவாரூரில் முறையாக ஆவணங்களை பராமரிக்காத 3 தனியார் மருத்துவமனை ஸ்கேன் மைங்கள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் நோயாளிகளிடம் உரிய கையெழுத்து பெற்று முறையாக ஆவணங்களை பராமரிக்க வேண்டும். இதனை மீறி செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment