வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களில் சிலர் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் 275 பேரின் சடலங்கள் திருச்சி விமான நிலையம் வழியாக கொண்டுவரப்படுகின்றன.
அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வீடு, நிலங்களை விற்றும், வட்டிக்கு கடன் வாங்கியும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா, சவுதி, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடு களுக்கு வேலைக்குச் செல்கின் றனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே ஏஜென்ட்டுகள் கூறியபடி நல்ல வேலை அமைகிறது.
பெரும்பாலானோர் குறைந்த ஊதியத்திலும், கொத்தடிமைகளாக வும் அங்கு பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாதியில் திரும்பினால் வாங்கிய கடனைக்கூட அடைக்க முடியாதே என்பதால், நிர்பந்தத்தின் காரணமாக அவர்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து பணி யாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
குடும்பத்துக்காக இப்படி தன் னையே வருத்தி உழைக்கும் இவர்களில் பலர் வெயில் தாங்கா மலும், விபத்துகளில் சிக்கியும், உடல்நலக்குறைவாலும் அங் கேயே இறப்பை சந்திக்கும் துயர நிகழ்வு அதிகரித்து வருகிறது. பணம் சம்பாதிக்கச் சென்ற மகனோ, கணவரோ சடலமாகத் திரும்பு வதைப் பார்த்து குடும்பத்தினர் கதறித் துடிக்கும் பரிதாபம் திருச்சி விமான நிலையத்தில் ஏறக்குறைய அன்றாட நிகழ்வாகிவிட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை விமானநிலையங் களைவிட பல மடங்கு அதிகமான சடலங்கள் திருச்சி விமான நிலையம் மூலம் கொண்டுவரப்படுகிறது.
இதுபற்றி விமான நிலைய கார்கோ பிரிவு அதிகாரிகள் கூறும் போது, “திருச்சி சர்வதேச விமான நிலையம் ஏற்றுமதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை எண்ணி பெருமைப்படும் அதே வேளையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் சடலங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருவது மிகுந்த வேதனை யாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 275 சடலங்கள் விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. இவர்களில் பெரும் பாலானவர்கள் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2014-15-ம் நிதியாண் டில் 272 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட் டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 110 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் சடலங்களை வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கான சுமைக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படு கிறது. சுங்கத் துறையின் தீர்வைக் கட்டணம், சேவைக் கட்டணம், விமான நிலைய ஆணையக் குழுமத்தின் கையாளும் கட்டணம் என எதுவும் வசூலிப்பதில்லை” என்றனர்.
விமான நிலைய மருத்துவ பிரிவி னர் கூறும்போது, “வெளிநாடு களில் இருந்து கொண்டுவரப்படும் சடலத்துடன், இறந்தவர் வேலை பார்த்த நாட்டின் இறப்புச் சான்றிதழ், தூதரக தடையில்லாச் சான்று, உடற்கூறு சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலானவர்களின் மரணத் துக்கு காரணம் உடல்நலக்குறைவு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலரது மரணத்துக்கு விபத்து என காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். கொலை செய்யப்பட்டு கொண்டு வருவது மிகக் குறைவு.
இறந்தவர்களில் 35 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண் களே அதிகம். பெண்களின் எண் ணிக்கை மிகக் குறைவு. இப்படி கொண்டுவரப்படும் சடலம், ஆய் வுக்குப்பின், சுங்கம் மற்றும் கார்கோ துறையினர் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு அரசின் இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்றனர்.