Wednesday 23 September 2015

திருவாரூரில் மழை


திருவாரூரில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்ததால், தண்ணீரின்றி காய்ந்திருந்த சம்பா பயிர்கள் துளிர்விட்டு வளரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது நடவு முறையிலும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சுமார் 1.50 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால் நேரடி நெல் விதைப்பு வயல்களில் முளைத்த பயிர்கள் பல இடங்களில் காய்ந்தும், காய்ந்து போகும் சூழலும் இருந்து வந்தது.
இதனால்  கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தரக்கோரி மாவட்டத்தில் விவாயிகள் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் திருவாரூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 45 நிமி டம் மழை பெய்தது.
இந்த மழை சம்பா பயிருக்கு முழுமையான பயனைக் கொடுக்காவிட்டாலும், காய்ந்த நிலையிலுள்ள பயிர்கள் துளிர்விட்டு வளர்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. வரும் நாள்களில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்து, மழையும் பெய்தால் சம்பா பயிர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.

No comments:

Post a Comment