Monday 21 September 2015

துபாய் மன்னரின் மகன் மாரடைப்பால் மரணம்


துபாய் மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமது (33) சனிக்கிழமை காலமானார்.
மாரடைப்பு காரணமாக, அவர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனமான "வாம்' தெரிவித்தது.
இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமதை விடுத்து, இளைய மகன் ஷேக் ஹம்தானுக்கு தான் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
உயிரிழந்த ஷேக் ரஷீது பின் முகமது, விளையாட்டு வீரராகவும், குதிரைப் பந்தய வீரராகவும் திகழ்ந்தார்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, துபாயில் 3 நாள்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment