Thursday 24 September 2015

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி


திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
செப். 25ஆம் தேதி முதல் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் பயிற்சி தொடங்கும் நாளன்று மதியம் 3 மணிக்கு தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதார நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment