Monday 24 August 2015

திருவாரூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆக. 26-ல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்


திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 26-ம் தேதி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆகஸ்ட் 2015 மாதத்துக்கான மாதாந்திர பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தடகளம், ஹாக்கி, கபடி மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
குழுப் போட்டியில் கபடியில் மாணவர்களுக்கும், ஹாக்கி விளையாட்டில் மாண விகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. தடகள விளையாட்டுக்களில் மாணவர் மற்றும் மாணவியருக்கு 100 மீ., 200 மீ., 800 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகளில் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டும் பங்கேற்கலாம். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கும், ஹாக்கி மற்றும் கபடி விளையாட்டில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும். போட்டியாளர்கள் குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். எனவே, மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366- 227158 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment