Friday 28 August 2015

லண்டனில் அம்பேத்கார் வசித்த வீட்டை இந்தியா விலைக்கு வாங்கியது

கஸ்ட் 28,2015, 1:05 AM IST





சட்ட மேதை அம்பேத்கார், லண்டனில் ஆராய்ச்சி படிப்பு படித்தபோது, எண் 10, கிங் ஹென்றி ரோடு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். 1921 மற்றும் 1922–ம் ஆண்டுகளில், மாணவராக அவர் அங்கு வசித்து வந்தார்.
அது, 3 மாடிகள் கொண்ட பங்களா வீடாகும். அதில், 6 படுக்கை அறைகள் உள்ளன. 2 ஆயிரத்து 50 சதுர அடியில் அமைந்துள்ளது.
அந்த வீட்டின் உரிமையாளர், கடந்த ஆண்டு அதை விற்பனைக்கு கொண்டு வந்தார். அந்த தகவலை அறிந்த மராட்டிய மாநில அரசு, வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தது. ரூ.31 கோடிக்கு விலைக்கு வாங்கப் போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால், பல்வேறு நடைமுறை பிரச்சினைகளால், இந்த விற்பனை முடிவுக்கு வராமல் தாமதம் ஆனது.
ஒப்பந்தம் பரிமாற்றம்இந்நிலையில், இழுபறி முடிவடைந்து, மராட்டிய மாநில அரசு நேற்று அந்த வீட்டை விலைக்கு வாங்கியது. இதுதொடர்பான ஒப்பந்தத்தை மராட்டிய மாநில சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலேவும், வீட்டு உரிமையாளரும் பரிமாறிக் கொண்டனர்.
ஆனால், வீடு எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சர்வதேச நினைவகம்இதுகுறித்து, இங்கிலாந்தில் உள்ள அம்பேத்கார் மற்றும் புத்தமத இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சந்தோஷ் தாஸ் கூறியதாவது:–
அம்பேத்கார் வசித்த வீடு, சர்வதேச நினைவகமாக மாற்றப்படும். அது, கல்வி மற்றும் கலாச்சார மையமாக திகழும். இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களும், படிக்க வரும் இந்தியர்களும் அதைப் பார்வையிடலாம். ஆனால், பொதுமக்களை அனுமதிப்பதற்கு முன்பு, வீட்டில் நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment