Saturday 15 August 2015

தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது; மத்திய அரசு அறிவிப்பு



,

சுதந்திர தினத்தையொட்டி போலீஸ் ஐ.ஜி.க்கள் அமரேஷ்பூஜாரி, சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேர் ஜனாதிபதி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக தீயணைப்புத்துறை இணை இயக்குனர் விஜயசேகரும் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

சிறப்பான பணிக்கு விருது

சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இன்று (சனிக்கிழமை) 69-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக போலீஸ் துறையைச் சார்ந்தவர்களுக்கு ஜனாதிபதி விருதினை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. விருது பட்டியலில் இடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

ஐ.ஜி.க்கள்

1. அமரேஷ்பூஜாரி-சென்னை போலீஸ் அகாடமி ஐ.ஜி. 2. சந்தீப்ராய்ரத்தோர்-தமிழக போலீஸ் துறையைச் சேர்ந்த இவர், டெல்லியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஐ.ஜி.யாக பணியாற்றுகிறார். 3.சி.சுதர்சன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை. 4. ஆனந்த்குமார் சோமானி-மதுரை சரக டி.ஐ.ஜி. 5. ரமேஷ்-போலீஸ் சூப்பிரண்டு, சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி. 6. ஜெயவேல்-தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கமாண்டண்ட், மணிமுத்தாறு. 7. மாரியப்பன்-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை. 8. கஜேந்திரகுமார்-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி. 9. ஸ்ரீதர்பாபு-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை. 10. டி.கே.நடராஜன்-கூடுதல் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருச்சி. 11.எம்.சுருளிராஜா-துணை போலீஸ் சூப்பிரண்டு, காங்கேயம். 12. கே.மனோகரன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, நாமக்கல். 13. பி.ஜேசுஜெயபால்-மதுரை நகர போலீஸ் உதவி கமிஷனர். 14. ஞானசேகரன்-துணை சூப்பிரண்டு, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு. 15. அங்குசாமி-துணை போலீஸ் சூப்பிரண்டு, சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு. 16. உலகநாதன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு. 17. தமிழ்செல்வன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, தஞ்சாவூர். 18. ஆறுசாமி-உதவி கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, போச்சம்பள்ளி. 19. டி.ரங்கசாமி-இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி. சென்னை. 20. சி.சிவன் அருள்-இன்ஸ்பெக்டர், மாநில உளவுப்பிரிவு, தஞ்சை. 21. சேகர்-இன்ஸ்பெக்டர், லஞ்சஒழிப்பு பிரிவு, சென்னை. 22. நடராஜன்-இன்ஸ்பெக்டர், தொழில்நுட்ப பிரிவு, சென்னை. 23. பி.சங்கர்லால்-இன்ஸ்பெக்டர், முதல்-அமைச்சர் பாதுகாப்பு பிரிவு, சென்னை. 24. பி.அப்பன்-சப்-இன்ஸ்பெக்டர், துடியலூர், கோவை. 25. ஜி.எழில்ராஜ்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை.

விஜயசேகர்

தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சுந்தரமூர்த்தி விஜயசேகர், சிறப்பான பணிக்காக ஜனாதிபதி விருது பெறுகிறார். தீயணைப்புதுறையைச் சேர்ந்த நிலைய அதிகாரி முத்தையா தியாகராஜன் மற்றும் வில்வதிரி நாதன், ஜெபமாலை குழந்தைராஜ் ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.

ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கம்பெனி கமாண்டர்கள் ராமன் லிங்கராஜ், தில்லை நடராஜன், ஏரியா கமாண்டர் சந்திரன் ஆர்.சித்ரா ஆகியோரும் ஜனாதிபதி விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment