Sunday 16 August 2015

திருவாரூரில் ரூ. 1.67 கோடியில் நலத் திட்ட உதவிகள்


திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ. 1.67 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ஆட்சியர் எம். மதிவாணன் தேசியக் கொடியேற்றினார். பின்னர், போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டாரர். தொடர்ந்து, விழா பந்தலில் அமர்ந்திருந்த தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
 பின்னர், சிறப்பாக பணியாற்றிய 47 போலீஸாருக்கும், என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் அரசுப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 161 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.  இதையடுத்து, 3 பேருக்கு வன்கொடுமை தீருதவி தொகை, 40 பேருக்கு இலவச தையல் இயந்திரம், 4 பேருக்கு சலவைப்பெட்டி, 4 பேருக்கு வேளாண் இடுபொருள்கள் உதவி என மொத்தம் ரூ. 1.67 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment