Saturday 22 August 2015

மன்னார்குடியில் செப். 21-ல் ஹசாரே பங்கேற்கும் தர்னா போராட்டம்


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அன்னா ஹசாரே பங்கேற்கும் தர்னா போராட்டம் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூரில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்கள் காவிரிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதாகக் கூறி, விளைநிலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தி, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.விவசாயிகளுக்கு 4 சத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும்.
முன்னாள் படை வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் செப். 21-ம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ள தர்னா போராட்டத்தில் காந்தியவாதி அன்னா ஹசாரே பங்கேற்கிறார் என்றார் பாண்டியன்.
அப்போது, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கத் தலைவர் சி.டி. அரசு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் த. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தன

No comments:

Post a Comment