Tuesday 18 August 2015

மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது






























திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்காக மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மூணாறு தலைப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது கோரையாறு தலைப்பு. மேட் டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல் லணை, பெரிய வெண்ணாறு வழியாக கோரையாறு தலைப் புக்கு வந்து சேர்கிறது. இங்கி ருந்து வெண்ணாறு, கோரை யாறு, பாமணி ஆறு ஆகிய 3 ஆறுகளுக்கு தண்ணீர் செல் வதால், கோரையாறு தலைப்பை மூணாறு தலைப்பு என்றும் கூறுவார்கள். மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட் டதை தொடர்ந்து மூணாறு தலைப்பில் இருந்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவ சாய நிலங்களுக்கு பாசனம் அளிப்பதற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதி வாணன் மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதா வது:-

2,295 கன அடி

முதல்-அமைச்சர் ஜெயல லிதாவின் உத்தரவின்படி காவிரி டெல்டாவில் நடை பெற உள்ள சம்பா சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த 9-ந் தேதி திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 13-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது. மேட்டூர் மற்றும் கல்லணை திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்ட பாசன ஆறுகளுக்கு தண்ணீர் வெகு அளவு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மூணாறு தலைப்பில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதில் வெண்ணாற்றில் வினாடிக்கு 428 கனஅடியும், கோரை யாற்றில் வினாடிக்கு 1457 கனஅடியும், பாமணி ஆற்றில் வினாடிக்கு 410 கனஅடியும் ஆக கூடுதலாக வினாடிக்கு மொத்தம் 2,295 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதிக மகசூல்

பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரை விவ சாயிகள் சிக்கனமாக பயன் படுத்தி அதிக மகசூல் பெற்று வளம்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி னார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெய சந்திரன், மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வெண் ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந் திரன், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், உதவி கலெக்டர்கள் முத்து மீனாட்சி, செல்வசுரபி, தஞ்சாவூர் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி குமார் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment