Friday 29 August 2014

சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் .


















சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கல்வி உதவித்தொகைகல்வியில் சிறந்து விளங்க வசதியின்றி கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவுலான ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த 2014–15–ம் கல்வியாண்டில் 11–ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலான ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது. (11–ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரம், 12–ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரம்) இக்கல்வி உதவித்தொகை, கல்விக்கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு 1,343 சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதிகள்இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவிகள் 10–ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நடப்பாண்டில் 2013–14–ம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முறையாக சேர்ந்து 11–ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்கள் ‘‘http://maef.nic.in’’ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்வி நிலைய தலைமை ஆசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் 11–ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1–ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்ப படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2–ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக ‘‘The Secretary, Maulana Azad Education Foundation, (Ministry of Minority Affairs, Government of India) Chelms Ford Road, New Delhi –110 055’’ என்கிற முகவரிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30–ந் தேதி மாலை 5.00 மணிக்குள் சேரும் வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment