Tuesday 26 August 2014

திரு.வி.க. கல்லூரியில் புதிய ஆராய்ச்சிப் படிப்புகள் தொடக்கம்

திருவாரூர் திருவிக கலைக் கல்லூரியில் தமிழ், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட 10 துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

இந்தப் படிப்புகளை தொடங்கிவைத்து அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:

திருவாரூர் திருவிக கல்லூரியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ. 1 கோடி ஒதுக்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

1970-ல் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் 14 பாடப் பிரிவுகளில் இளநிலை பட்ட வகுப்புகளும் 11 துறைகளில் முதுநிலை பட்ட வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. சுமார் 3,500 மாணவர்கள் படித்து வரும் கல்லூரியில் 75 சதவீத மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கல்லூரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 20 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன; மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனாó.

தற்போது, தமிழ், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வணிக நிர்வாகவியல், காட்சி வழி தகவல் தொடாóபியல், இதழியல் மற்றும் தகவல் தொடாóபியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார வளாóச்சி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வியே மிகவும் இன்றியமையாதது என்பதால், கல்வியே சமுதாயத்தை முன்னெடுத்து செல்கிறது என்று கூறலாம் என்றார் காமராஜ்.

நாகை எம்.பி. கே. கோபால், ஆட்சியர் எம். மதிவாணன், கல்லூரி முதல்வர் விஸ்வலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment