Thursday 21 August 2014

21 இலட்ச வாடிக்கையாளர்களை இழந்த பி.எஸ்.என்.எல்!!

மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 21 இலட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்ட போது 21 இலட்ச வாடிக்கையாளர்கள் பயன்பாட்டில் இல்லாததை இந்நிறுவனம் கண்டிறிந்துள்ளது. இந்த இணைப்பு துண்டிப்பின் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 8.94 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. 

என்ன காரணம்?? கடந்த 10 வருடமாக வாடிக்கையாளர் தளத்தில் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களை நீக்கும் பொருடாக இணைப்பு துண்டித்தோம். இதன் மூலம் இந்த இணைப்பு எண்ணை மீண்டும் உபயோகப்படுத்த முடியும் என பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment