Sunday 31 August 2014

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7% ஆக உயர்வு!! வேளான் துறை வளர்ச்சி 3.8% சரிவு..

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துவித்துள்ளது. மேலும் 5.7 சதவீதத்தை எட்டியதை தொடர்ந்து இருவருட உயர்வை எட்டியது குறப்பிடதக்கது.புதிய அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அதிகப்பிடியான அன்னிய முதலீடு அனுமதி மற்றும் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக 2 வருடமாக சரிந்திருந்த நாட்டின் வளர்ச்சி
தற்போது மீண்டுள்ளது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது வலுவான நிலையில் உள்ளது. தங்க இறக்குமதி மற்றும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக நாட்டின் தங்க இறக்குமதி குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.ஆனால் கடந்த நிதியாண்டில் 3.9 சதவீதம் சரிவடைந்திருந்த சுரங்க துறை உற்பத்தியை நடப்பு நிதியாண்டில் 2.1 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.மேலும் நடப்பு நிதியாண்டில் அதிகப்படியான வளர்ச்சி கண்ட துறை நிதி சேவைத் துறையாகும். இக்காலகட்டத்தில் இத்துறை 10.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதுபோல தயாரிப்பு துறையின் உற்பத்தி 3.5 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.இதேபோல் மின்சாரம், எரிவாயு துறைகள் தலா 10.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை முறையே 2.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.ஆனால் வேளாண் துறை வளர்ச்சி 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment