Friday 1 August 2014

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாணவர் சேர்க்கை நடைபெற்றது


திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 85 இடங்கள் மாநில ஒதுக்கீ டு, 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 மாணவர்கள் சேர்க்கப் படுகிறது. இக்கல்லூரியில் 2013-2014 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அகில இந்திய மருத்துவக் கவுன்சில், கல்லூரி போதிய வசதிகளின்றி செயல்படுவதாககூறி மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்திருந்தது.

பின்னர் அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்த தையடுத்து 2-ம் கட்ட கலந்தாய்வில் 46 மாணவர்கள், 39 மாணவிகள் என 85 பேர் தே ர்வு செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாண வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. மொத்தமுள்ள 85 மாணவர்களில், மாணவி கள் அனைவரும் சேர்க்கப்பட்டனர். ஒரு மாணவர் வரவில்லை. மற்றொரு மாணவர் உண்மை சான்றிதழ் எடுத்துவரவில்லை.

No comments:

Post a Comment