Saturday 23 August 2014

திருவாரூரில் ஆக.26-ல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்


திருவாரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோருக்கு இணைப்பு மற்றும் சிலிண்டர்கள் வழங்கும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் வருகிறது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆக. 26-ம் தேதி மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளாóகள், நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
எனவே, நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்று தங்களது பிரச்னைகள் குறித்து தெரிவித்து பயன் பெறலாம்.

No comments:

Post a Comment