Friday 22 August 2014

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் மக்கள் அவதி

மாற்று சாலையை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு






 
நீடாமங்கலம், ஒளிமதி ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாற்று சாலையை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ரெயில்வே கேட்திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில்கேட் அடிக்கடி பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்திற்காக மூடப்படுவதால் கும்பகோணம் – மன்னார்குடி – அதிராம்பட்டினம் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67–ல் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்ல மாற்று சாலை வழி குறித்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–

திட்ட மதிப்பீடுஇந்த மாற்று சாலை வழி நீடாமங்கலம் ரெயில்வே கேட்டிற்கு முன்தாக பிரிந்து பேருராட்சி சாலை, பழைய நீடாமங்கலம் சாலை, அனுமந்தபுரம் சாலை, கிளரியம் பாலத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை 67–ல் மீண்டும் இணைகிறது. நீடாமங்கலம் மற்றும் ஒளிமதி 2 ரெயில்வே கிராசிங்குகளை தவிர்க்கும் வகையில் மாற்று பாதை அமைகிறது. இதில் 3.20 கிலோ மீட்டர் நீளமுள்ள அனுமந்தபுரம் சாலையினை மாற்றுவழிக்காக மேம்படுத்த ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment