Friday 30 May 2014

விடைபெற்றார் திருவாரூர் ஆட்சியர் நடராசன்


திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றி தற்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சி. நடராசன், வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று உருக்கமாகப் பேசி விடைபெற்றார்.

1.2.2012 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சி. நடராசன் பொறுப்பேற்றார். 2 ஆண்டு 3 மாதங்கள் பணியாற்றிய இவர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று புதன்கிழமை அறிவிப்பு வெளியானது. இதை யடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்தார்.

அப்போது விவசாயிகள் முன்னிலையில், தினசரி நாளிதழ்கள் வராத ராமநாதபுரம் மா வட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அப்போது பெற்றோர்கள் எனக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கைக் கொடுத்தார்கள். வறட்சி மாவட்டத்தில் வளர்ந்த எனக்கு திருவாரூர் மாவட்டம் என்றதும் நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைக்கு செல்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

இங்கு வந்து பார்த்ததும் ஒருவித அச்சம் ஏற்பட்டது. காவிரி இல்லையென்றால் திரு வாரூர் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம்தான். திருநெல்வேலியில் இரு மாதம் ஆட்சியராகப் பணியாற்றி, சென்னையில் 6 மாதப் பணிக்குப் பிறகு திருவாரூர் மாவட்டத்து க்கு வந்தேன். அப்போது நண்பர்களெல்லாம் திருவாரூரில் சாதித்துக்காட்டு என்றார்கள்.


விவசாயிகள் கோரிக்கை வைத்ததால் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது கலெக்டர் நடராஜன் வந்து பேசினார். மாற்றம் என்பது அனைவருக்கும் சகஜம்தான். இதை நானும் எதிர்பார்த்து கொண்டு தான் இருந்தேன். விவசாயிகளின் கடைசி கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென விரும்பி வந்துள்ளேன். எனது பணி காலத்தில் சில நேரங்களில் உங்களிடம் கோபமாக நடந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் நீர் செறிவூட்டல் திட்டத்தால் வரும் 400 முதல் 500 ஆண்டுகள் வரை குடிநீர் பஞ்சம் இருக்காது என்று நம்புகிறேன். உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வையுங்கள். எங்கிருந்தாலும் இந்த மாவட்டத்தை பற்றி நினைத்து கொண்டு தான் இருப்பேன் என்றார். கண் கலங்கியவாறு கலெக்டர் நடராஜன் பேசிய பேச்சை கேட்ட விவசாயிகளும் கலங்கினர்.

மண்ணையும், விவசாயத்தையும் நேசித்த நான், திருவாரூர் மாவட்ட மக்கள் தண்ணீருக்காக பிற மாவட்டங்களுக்கு எங்கும் செல்லக்கூடாது. தலைமுறைக்கு தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க வேண்டுமென்று யோசித்து, நண்பர் ஒருவரின் ஆலோசனையின்படி நீர்செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

திட்டம் தொடங்கிய இரு ஆண்டில் அதன்பயன் கிடைத்ததன் எடுத்துக்காட்டாக மாநிலத்தில் பிற மாவட்டங்களில் இல்லாத வகையில் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீ ர்மட்டம் உயர்ந்திருந்தது. இது பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. தமிழக முதல்வர் சிறப்புத் திட்டங்களுக்கான விருது எனக்கு அளித்தது மகிழ்ச்சிக்குரியது. பணியாற்றியக் காலத்தில் விவசாயிகள் பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் இனம் புரியாத பாசத்தை வெளிப்படுத்தினார்கள். அதற்கு நன்றி என்று உருக்கமாகப் பேசி அனைவரிடமிருந்து விடைபெற்றார் நடராசன்.

No comments:

Post a Comment