Tuesday 27 May 2014

சிலிண்டரை பரிசோதித்து வாங்குவது அவசியம்'

எரிவாயு சிலிண்டர் பெறும்போது ஒவ்வொரு முறையும் பரிசோதித்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிவாயு பாதுகாப்பு முறைகள் குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டரை ஒவ்வொரு முறை பெறும்போதும் சிலிண்டரின் மேல் உள்ள மூடியை அகற்றி சிலிண்டர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அடுப்பை விட மேலான இடத்திலோ அல்லது அடுப்புக்கு அருகிலோ சிலிண்டரை வைக்க வேண்டாம்.

சமையல் செய்யும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகளை சமையலறைக்குள் விளையாட அனுமதிக்க கூடாது. சமையலறை யில் எளிதில் தீப்பிடிக்க கூடிய மண்ணெண்ணெய், டீசல், விறகு போன்ற பொருளைகளை வைக்க கூடாது. புதுரப்பர் இணைப்புக் குழாயை மாற்றும்போது ரெகுலேட்டர் நாசிலில் முழுவதுமாக பொருந்தும்படி இணைக்கவும். இரவில் தூங்கும் முன் சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை ஆப் செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் கேஸ் பயன்படுத்துவதற்கு முன்பாக வீட்டிலுள்ள ஜன்னல்களை திறந்துவிட்டு சிலிண்டர் மற்றும் ரப்பர் இணைப்பு குழாய் நல்ல நிலையில் உள்ளதா அல்லது ஏதேனும் கசிவு உள்ளதா என பரிசோதித்துவிட்டு பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது ரப்பர் இணைப்பு குழாயில் விரிசல்கள் உள்ளதா என சரிபார்க்க மறக்க வேண்டாம். குறைந்தது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐஎஸ்ஐ முத்திரையிட்ட கேஸ் இணைப்பு குழாயை மாற்றவும். சுரக்ஷô குழாய் உபயோகிப்பின் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றவும்.

சிலிண்டர், டியூப், ரெகுலேட்டர் போன்றவற்றின் தரத்தை பரிசோதிக்க காஸ் நிறுவனத்தில் இருந்து வரும் பரிசோதகர்களை அனுமதிக்க வேண்டும். காஸ் கசிவதை உணர்ந்தால் உடனே ரெகுலேட்டர் மற்றும் பர்னர் குமிழ்களை மூடிவிடவும். உடனே எளிதில் தீப்பிடிக்கக் கூடியவற்றை அப்புறப்படுத்தவும். வால்வில் கசிவு இருந்தால் பாதுகாப்பு மூடியால் மூடவும். ஜன்னல் மற்றும் கதவுக ளை திறந்து வைக்கவும். மின்சார சுவிட்சுகளை இயக்க வேண்டாம்.

உடனே, உங்கள் விநியோகதஸ்தரையோ அல்லது அவசர சேவைப் பிரிவையோ தொடர்பு கொள்ளவும். அதிகமாக கேஸ் கசிவு ஏற்பட்டால் உடனே தீயணைப்புத் துறையை அழைக்கவும்

No comments:

Post a Comment