Friday 30 May 2014

முதன்முறையாக டில்லியில் தரையிறங்கியது ஏ380 ரக விமானம்



 





 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சுக்கு சொந்தமான ஏர்பஸ்380 ரக விமானம் டில்லியில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 471 பேர் பயணம் செய்யலாம். உலகில் அதிக பயணிகள் பயணம் செய்யும் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் 12 ஆடம்பர அறைகள், 60 பிசினஸ் மற்றும் 399 எகானமிக் கிளாஸ் சீட்கள் உள்ளன. இந்த விமானத்திற்கு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த விமானத்தில் எகானமிக் கிளாஸ் பிரிவு டிக்கெட் விலை ரூ.30 ஆயிரம். பிசினஸ் கிளாஸ் கட்டணம், மூன்று மடங்கு அதிகரிக்கும். ஆடம்பர அறைகளுக்கான கட்டணம் ரூ.2 லட்சம் ஆகும். இந்த விமானம் டில்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதன் முறையாக இரவு டில்லி வந்து சேர்ந்தது.
இந்த விமானம் இரட்டை அடுக்கு வசதிகொண்டது. இந்த விமானத்தில் 4 இன்ஜீன்கள் உள்ளன. இந்த விமானம் 15,700 கி.மீ., தூரம் பயணம் செய்யக்கூடியது.
அடுத்த வாரம் முதல் , ஏ380 ரக விமானத்தை மும்பை மற்றும் துபாய் இடையே இயக்கப்படும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment