Friday 23 May 2014

திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இஸ்லாமிய மாணவிகள் சாதனை





திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் 




எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ம ன்னார்குடி பள்ளி மாணவிகள் மாநில அளவில் 3-மிடமும், மாவட்ட அளவில் முதலிடத் தையும் பெற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 18,560 மாணவர்களில் 15,615 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று, தேர்ச்சி சதவீதம் 84.13 ஆகியுள்ளது.

திருவாரூர் ஆர்.சி.பாத்திமா பள்ளி மாணவி பி. சிவானி, மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரி க் மேல்நிலைப்பள்ளி மாணவி சி. ஜனனி, திருத்துறைப்பூண்டி செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி (கட்டிமேடு)  முசைபர் நிஷா ஆகியோர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மா நில அளவில் மூன்றாமிடம் பெற்றதுடன், திருவாரூர் மாவட்ட அளவில் மூவரும் முதலிட த்தைப் பிடித்துள்ளனர்.

இதே போல், மாவட்ட அளவில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் 2-மிடமும், 495 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் 3-மிடத்தைப் பிடித்துள்ளனர்.

2-மிடம் பெற்றவர்களின் விவரம்:முத்துப்பேட்டை ரகமத்பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாண வி கே. பாலசுந்தரி, மன்னார்குடி ஜெயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக ள் எஸ்.ஆர். மோகனப்பிரியா, எஸ்.கே. சுஷ்மிதா, திருத்துறைப்பூண்டி செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி  (கட்டிமேடு )ரைகானா தஸ்ஸீம், சாய்ராம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மா ணவி எஸ். ஜே. யோகா, மேலமரவக்காடு பள்ளி மாணவி ஆர். ரஞ்சிதா ஆகியோர் 2-மி டம் பெற்றனர்.

3-மிடம் பெற்றவர்கள் விவரம்: பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி. வர்சபூரணி, மன்னார்குடி சண்முகா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். அர்ச்சனா, மேலமரவக்காடு தேவி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி கே. அரு ள்மொழி, திருத்துறைப்பூண்டி செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி (களப்பால்)   நபீலா ஜெப்ரா னா,

ஆர் சி பாத்திமா மாணவி ஷிவானிக்கு தலைமை ஆசிரியை இனிப்பு ஊட்டினர் .
 உள்ளிக்கோட்டை நவபாரத் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். சூர்ய பிரகாஷ், சேந்தமங்கலம் மெரிட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். ஸ்வானி.






திருவாரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பில் முர்ஷிதா நிஸ்ருன் என்ற மாணவி முதலிடம் பெற்றது ,ஆனால் பள்ளிக்கோ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமல் பெற்றோர்கள் செய்த தாமதம் எதுவுமே இன்றைய 10ம் வகுப்பு முடிவில் இல்லாமல் முதல் மூன்று இடத்திலும் இஸ்லாமிய மாணவிகள் வந்தும்  மதியமே மாவட்ட தில் முதலிடம் பெற்ற கட்டிமேடு  மாணவியின் பேட்டி  டி வி களில் ஒளிபரப்பானது .

மாலையில் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நடைபெற்றது .பெற்றோர்கள்  மற்றும் சொந்தங்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பு பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் .

No comments:

Post a Comment