Saturday 28 February 2015

கொடிநகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாரூர் கொடிக்கால் பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை 28/2/2015 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் கலிலூர் ரஹ்மான் தலைமை வகித்தார் .இதில் ஒய்வு பெற்ற சுங்க துறை துணை கண்கணிப்பாளர் முஹம்மது ஆதம் கண்காட்சியை துவங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ஜலாலுதீன்,பொருளாளர் முஹம்மது அப்துல் காதர்,நிர்வாககுழு உறுப்பினர்கள் அப்துல் பத்தாஹ்,சேக் முஹம்மது ,நிஷாத் அலி ,ஹிதாயத்துல்லாஹ் பள்ளி தலைமையாசிரியை கலையரசி மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ரோட்டரி கிளப் ஆப் டேங்க் சிட்டி தலைவர் பாஸ்கரன் பள்ளிக்கு 30 மேசைகளை வழங்கினார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பெற்றோர்கள் பொதுமக்கள் ,கொடிக்கால்பாளையம் நகராட்சி துவங்கப்பள்ளி மாணவர்கள் கண்டு பயன் அடைந்தனர்.மேலும் அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி கள்  சாரா மற்றும் சப்பனா வுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்

No comments:

Post a Comment