Monday 9 February 2015

திருவாரூரில் தீ விபத்து: 10 கடைகள் எரிந்து நாசம்


திருவாரூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தேனீர் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.
திருவாரூர் பழையப் பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை இரவு வியாபாரத் த்தை முடித்து உரிமையாளர்கள் கடையை பூட்டி சென்றனர். சுமார் 11 மணியளவில் அப்பகுதியில் ஒரு கடை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டு பலன் இல்லை. தீ கொழுந்து விட்டு மள மளவென எரியத் தொடங்கி அடுத்தடுத்த கடைகளும் பரவியது.
இதனால் பெட்டிக்கடை, செருப்புக்கடை, தேனீர் கடை, கவரிங் கடைகள் உள்ளிட்ட 13 கடைகள் தீயில் எரிந்து நாசமானது. திருவாரூர், நன்னிலம், குடவாசல், கீழ்வேளூர் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருள்கள் சேதமடைந்தன. திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment