Tuesday 10 February 2015

தில்லி தேர்தல் முடிவுகள்: பாஜக, காங்கிரஸ் கற்க வேண்டிய பாடங்கள்


தில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி  பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்படி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. பாஜக ஒற்றை இலக்கத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லாமலும் உள்ளது.
 இந்த தேர்தலில் இரு கட்சிகளும் சில பாடங்களை கற்பதன் மூலம், இனிவரும் தேர்தல்களின் மோசமான தோல்விகளை தவிர்க்க முடியும். அவை..
மோடி அலை குறைந்து வருகிறது:
அளவுக்கு மீறிய வேகம், ஒரு கட்டத்தில் குறைந்துவிடும் என்பது விதி, இதற்கு மோடியும் விதிவிலக்கு அல்ல.ஒவ்வொரு மாநிலத் தேர்தல்களிலும். மோடியின் வேகம் குறைந்து கொண்டே வந்துள்ளது. டெல்லி தேர்தலில் ஏற்பட்டுள்ள  தோல்வி,  மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பாஜகவினர் மோடியை மட்டும் ஒருகாரணியை எண்ணிக்கொண்டு தேர்தலில் நிற்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆம் ஆத்மி தில்லியில் ஒரு வலிமையான சக்கி:
ஆம் ஆத்மி கட்சி, தேசிய அளவில் பெரிய கட்சி கிடையாது, அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேர்தலில் தோற்றது. ஆனால் தில்லியில்அந்த கட்சி மிகப்பெரிய வலிமையுடன் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் உள்ளது எனவே அங்கு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. மாநிலத் தேர்தல்களில் காங்கிரசும், பாஜகவும் மெத்தனப்போக்குடன் இல்லாமல், மற்ற  மாநில கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலிமையாக ஏதாவது செய்ய வேண்டும்.
காங்கிரஸ்க்கு தொடரும் தோல்வி:
காங்கிரஸ் கட்சிக்கு  தில்லியில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 வது முறையாக ஆட்சி செய்த போது நடைபெற்ற ஊழல்களை வாக்காளர்கள் மன்னிக்க தயாராக இல்லை என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தியின் தலைமையில் கீழ் புதிய எழுச்சி உருவாக வேண்டும்.
கிரண் பேடியை தேர்தெடுத்ததால் பாஜகவில் ஏற்ப்ட்ட ஒற்றுமையின்மை
கிரண்பேடியை முன்நிறுத்தி தில்லி தேர்தலில், மோடி வைத்த கோரிக்கையை  பாஜகவின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை. மேலும் தில்லி மாநில பாஜகவில் அதிக அளவில் அதிருப்தி நிலவியது. கிரண்பேடியை வேட்பாளராக நிறுத்திதால் மாநில பாஜக தொண்டர்களுக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லாமல் போனது.
ஆட்சியார்கள் மீதான அதிருப்தி:
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில தேர்தல்களில் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியால் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ஆனல் தில்லி அப்படியல்ல. தில்லி இந்தியாவின் தலைநகர். இங்கு தான் மோடி பிரதமராக உள்ளார். எனவே மற்ற கட்சிகள் மீதான செயல்திறன் அதிருப்தி மூலம்,  இங்கு பாஜகவால் ஆதாயம் பெறமுடியவில்லை.
பாஜகவிடம் இன்றும் எச்சரிக்கையாக இருக்கும் முஸ்லீம்கள்
சாக்ஸி மகாராஜ் போன்றோர் இந்துத்துவாவை முன்னிறுத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் முஸ்லீம்களை பாஜகவிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமித் ஷாவின் வியூகத்தில் பின்னடைவு:
தில்லி தேர்தலில் பாஜகவின்  மிகப்பெரிய பலம் என்றால் அது அமித் ஷா தான். ஆனால், கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற அவருடைய முடிவுகள் வாக்காளர்களிடம்  எடுபடவில்லை.
மாநில தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வெவ்வேறானவை:
தில்லி தேர்தல் மோடியை முன்னிறுத்தி அமையவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி , கெஜ்ரிவாலையே முன்னிறுத்தி செயல்பட்டது. தனிமனித ஆளுமையை மையப்படுத்தி இந்த தேர்தல் இருந்தது. மேலும் மாநில தேர்தல். நாடாளுமன்ற தேர்தலுக்கிடையேயான வேறுபாட்டை  வாக்காளர்கள் புரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வும் தற்போது அதிகரித்துள்ளது.
தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாகாது:
தங்களுக்கு எதிராகவே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் இருந்ததை அந்த கட்சிகள் ஏற்கவில்லை. ஓரளவிற்கு வெற்றி என்ற கருத்துக்கணிப்புகளையும் மீறி ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
உலக தேர்தல் வரலாற்றில் 95 சதவீத இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. எனவே தன் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ந்து செயல்படுவார் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment