Thursday 19 February 2015

முத்துப்பேட்டை கந்தூரி விழா: திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 2-ல் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மார்ச் 2-ம் தேதி கந்தூரி விழாவை முன்னிட்டு, அன்று திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முத்துப்பேட்டை தர்காவில் பிப். 20-ம் தேதி கந்தூரி விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு கந்தூரி விழா மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக மார்ச்-14-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக இருக்கும். எனினும் மார்ச் 2-ம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment