Sunday 15 February 2015

முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சி : ஓ.பி.எஸ்


ஓ.பன்னீர்செல்வம்| கோப்புப் படம்
முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
முதலீட்டாளர்கள் ஆயத்த மாநாடு சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்.
இதில் இந்திய தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள், பன்னாட்டு கம்பெனிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: ''தமிழகம் தொழில் தொடங்குவற்கு முதல் மாநிலமாக திகழ்கிறது.முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
முதலீட்டாளர் மாநாடு மூலம் ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. உள் நாடு, வெளிநாடு, முதலீட்டாளர், தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறோம்.
தொழில் அதிபர்களின் திட்ட அறிக்கையை உடனே பரிசீலித்து தொழில் தொடங்க அனுமதிக்கிறோம். திட்ட அறிக்கையை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு பரிசீலித்து தொழில் தொடங்க பரிந்துரைக்கும்.'' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
மே மாதம் 23, 24ல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு முன்னோட்டமாக தொழிலதிபர்களைச் சந்திக்கும் ஆயத்த மாநாடு சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment