Tuesday 10 February 2015

பட்டங்கள் வேலை தேடுவதற்கான ஒரு நுழைவுச் சீட்டு மட்டுமே


மாணவர்கள் பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. குணசேகரன் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் பட்டம் பெறுவது மட்டும் போதுமானதல்ல. மாணவர்கள் பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பட்டங்கள் வேலை தேடுவதற்கான ஒரு நுழைவுச் சீட்டு மட்டுமே. கடுமையான உழைப்புடன் நேரத்தை சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நூலகத்தில் மாணவர்கள் நேரத்தை கூடுதலாக செலவழிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் லதா பிள்ளை சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பேசியது:
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் முன்னேற்றம் அவசியமாகிறது. இளைஞர்களுக்கு சரியான பயிற்சி இல்லையென்றால் நாடு வளர்ச்சியடையாது.
இளைஞர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் நல்ல கல்வி கிடைக்கிறது. தற்போது நிதியறிவு, பொருளாதார அறிவு, தொழில் முனைவதற்கான அறிவு ஆகியவை தேவைப்படுகின்றது. ஆகவே இளைஞர்கள் அத்தகைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார் அவர்.
கல்வி, தனித்திறனில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment