Thursday 12 February 2015

திருவாரூர் மாவட்டத்தில் பிப். 13,14-ல் குடிநீர் விநியோகம் ரத்து


வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திருவாரூர் மாவட்டத்தில் வரும் 13, 14-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (பராமரிப்புக் கோட்டம்) நிர்வாகப் பொறியாளர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். 
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் குடிநீர்க் குழாய் செல்லும் இடங்களில் பட்டவர்த்தி வாய்க்கால் அருகே திருத்துறைப்பூண்டி-முள்ளியாறு குழாய் தாங்கும் பாலம் மற்றும் வளவனாறு-கரையான்காடு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய உள்ளதால் பிப். 13,14 ஆகிய இருநாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
 எனவே, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் நகராட்சிகள், முத்துப்பேட்டை, தலைஞாயிறு பேருராட்சிகள், கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டுர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் பராமரிப்பு நாள்களில் குடிநீர் விநியோம் இருக்காது.
 
 

No comments:

Post a Comment