Thursday 12 February 2015

விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையிலு ள்ள சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுவதால் தகுதி யானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.குறைந்தபட்ச தகுதிகளாக தேசி ய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருக்க வேண் டும்.
தேசியப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவா்கள் மட்டுமே தகுதிபெறுவா். அங்கீ கரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்கள் மூலம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங் கேற்றிருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் இத்திட்டத்தி ன்கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கக் கூடாது.
2014 ஏப்.1-ம் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ. 6,000-க்குள் இருக்க வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட, விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச் சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுகிறவர்கள், மத்திய, மாநில அரசின்கீழ் ஓய்வூதியம் பெறுகிறவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. ஓய்வூதியத் தொகை பெற விரும்புவோர் விளையாட்டுச் சான்றிதழ் நகலுடன் ஆட்சியா் வளாகத்திலுள்ள மாவட்ட விள யாட்டு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் பிப்.25-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04366-227158 தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment