திருவாரூர் அருகே திங்கள்கிழமை சோப்புத்தூள் விற்பவராக நடித்து, பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையம் சின்னப்பள்ளி வாசலைச் சேர்ந்த ஹாஜா சேக்அலாவுதீன் மகள் நூருல்பரிதா (23). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது,
சோப்புத்தூள் விற்பவர் போல் வந்த ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்றுள்ளார். நூருல்பரிதா கூச்சலிட்டதையடுத்து, பொதுமக்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த நபர் தென்காசி அருகேயுள்ள கடையநல்லூரைச் சேர்ந்த அபுல்காசிம் மகன் ரகமதுல்லா (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment