Sunday 1 February 2015

ஜமாஅத் நிர்வாகம் மேலும் மூன்று மாதம் நீடிப்பு






நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத்தின் வருடாந்திர மஹாஜனசபை கூட்டம் 31/01/2015 அன்று பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் தலைவர் ரபியுதீன் தலைமையிலும் வக்ப் வாரிய ஆய்வாளர் ஹைதர் அலி முன்னிலையிலும் நடைபெற்றது.


இதில் ஜமாஅத்தின் 2014-2015 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை , மத்லபுல் கைராத் கல்வி குழும்ம,பைத்துல்மால் ,52 பணப்பகுதி,தினா இப்ராகிம்ஷா ராவுத்தர் வக்ப் தர்ம டிரஸ்ட் ஆகிய ஆண்டு அறிக்கைகள் வாசிக்கப்பட்டது.

மேலும் தற்போதைய ஜமாஅத் நிர்வாகத்தின் பதவிக்காலம் 31/01/2015 அன்றுடன் முடிவடைவதால் தற்போது நடைப்பெற்று வரும் வழக்கு தீர்ப்பு வரும்வரையிலும் தொடர்ந்து  மூன்று மாதம் காலம் நீடிக்க பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .பின்னர் ஊர் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவருக்கும் தலைக்கட்டு சோறு என்னும் ஊர் உணவு வழங்கப்பட்டது .இதில் ஜமாஅத் செயலாளர் ஜாகிர் ஹூசேன்,துணைத்தலைவர் ஜெகபர் சேக் அஅலாவுதீன்  மற்றும் நிர்வாகிகள் ,ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
காரசாரமான விவாதங்கள் ,பரபரப்புகள் கொண்ட கூட்டம் 4மணி நேரம் நீடித்தது.

No comments:

Post a Comment