Sunday 1 March 2015

Kodikkalpalayam - பாச்சோறு பெருவிழா

பாச்சோற்று பெருவிழா





திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இப்பெருவிழாவாக நடைபெற்று வருகிறது.
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் தங்கியிருந்த சைய்தினா சைய்யது மஃஸூம் சாஹிப் அவர்கள் ஒரு ஆலம் விழுத்தை ஊன்றியதைகொண்டு அது பெருமரமாகி தோன்றியாதாக்கூறுவார்கள்.
அதனை நினைவு கூறும் விதமாக அன்றைய காலத்தில் உணவு சமைக்கப்பயன்பட்ட "மடா" என்னும் மண்பானையில் 5 படி பச்சைஅரிசி 5 சேர் சர்க்கரை 5 தேங்காய்களை கொண்டு பாகுச்சோறு எனப்படும் பாச்சோறு (சக்கரை பொங்கல்)சமைத்து பள்ளிவாசல் கொண்டு வந்து இறைவனிடம் பிராத்திகத்து அனைவர்களுக்கும் பகிர்தளித்து உண்ணுமாறு மஹான் அறிவுறுத்தி உள்ளார்கள் .
இதனை தொடக்க காலத்தில் ஒரு சில சட்டிகள் வந்த நிலையில் இன்று நூற்றுக்கானக்கான சட்டிகள் வந்தன. மேலும் அனைவர்களும் ஜாதி மத பேதம் இன்றி மனித நேய மத நல்லிணக்க விழாவாக நடைபெருவது தனி சிறப்பாகும்.

http://youtu.be/qDGppl-dsvU

இதற்காக விழா ஏற்பாடுகளை ஜமாஅத் தலைவர் ரபீயூதீன் ,செயலாளர் ஜாகீர் ஹூசேன், துணைத்தலைவர் ஜெகபர் சேக் அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து இருந்தனர்

No comments:

Post a Comment